Monday, May 07, 2012 மே 26, 27 சனி, ஞாயிறு தேதிகளில் தென்காசி வி.டி.எஸ்.ஆர். நகரில் மாபெரும் தப்லீக் இஜ்திமா பந்தல் அமைக்கும் பணியை தலைவர் பேராசிரியர் நேரில் பார்வையிட்டார்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட அளவிலான மாபெரும் தப்லீக் இஜ்திமா தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.டி.எஸ்.ஆர். நகரில் வருகிற 26, 27-05-2012 சனி, ஞாயிறு இரு தினங்கள் மிகச் சிறப்பாக நடைபெற இருக் கிறது.
இஜ்திமாவில் நான்கு மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். இதற்காக வி.டி.எஸ்.ஆர். நகரில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
6-5- 2012 அன்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இஜ்திமாவிற்கான பந்தல் அமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட் டார்.
தலைவர் பேராசிரியருடன் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ,மாநில செயலாளர் வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன், மாவட்டத் தலைவர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மணிச்சுடர் நிருபர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, நெல்லை டவுண் நகரச் செயலாளர் எஸ். மசூது ஆகியோர் உடன் வந்தனர்.
இஜ்திமா பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட வந்த அவர்களை தொழில் அதிபர் வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில், ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத், சிங்கப்பூர், முஹம்மது முஹ்யித்தீன், எம்.ஏ. பீர் முஹம்மது ஹாஜியார், ஆதம்பாவா, சபீர் அலி, வீரை மைதீன் உள்ளிட்டோர் வரவேற்ற னர். |