Flash News
|
|
|
முக்கிய செய்தி
Saturday, May 26, 2012 பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் கோவையில் நடைபெற்ற இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்
பத்து ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடுபவர் களை தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பா ளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தின் சார்பாக கோவை சாரமேடு ரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஏ. அப்துல் ரஹீம் தலைமையிலும், எஸ்.எம். காஸிம், பி அப்துல் கபூர், எம்.ஏ. முஹம்மது சிபிலி, ஏ. அப்துல் ரஹ்மான், டி ஷாஜஹான், எம்.எஸ். முஹம்மது யாகூப், வி.எம். முஹம்மது காசிம், வி.எ. முஹம்மது குட்டி, பி.கே. அப்துல் சலாம், வி.கே. ரஹமத்துல்லா, பி.எஸ்.எம். உசேன், எம்.எஸ். முஹம்மது ரபீக், கியூ அக்பர் அலி, ஏ.கே. சாகுல் ஹமீது, ஐ. அப்துல் காதர், கே.எச். யஹ்யா, ஏ.வி.இப்ரா ஹீம், ஏ.எம். அப்துல் வாப், த.மு. ஜலீல், வி.ஏ. சஹாப்தீன், பி.ஐ. சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புறநகர் மாவட்டச் செயலாளர் ஏ.எம். இப்ராஹிம் வரவேற்புரையாற்றினார்.
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர் களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோவையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை மாநகரத்திற்கு வரும்போதெல்லாம் எனக்குள் என்னை அறியாமலேயே ஒரு சோகம் நிலைக்கு தள்ளப்படு கிறது. அதற்கு காரணம், ஏதோ ஒரு காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் யாருடைய வழிகாட்டுதலின்பேரிலோ அல்லது சமுதாய உணர்வு என்ற அடிப்படையிலோ ஏதோ சமூக பணி செய்வதாக கருத்தில் கொண்டோ அல்லது அறியாமை யின் காரணமாகவே பல இளை ஞர்கள், இளமை காலங்களில் தட்டுத்தடுமாறி தவறு செய்தார் களோ இல்லையோ ஆனால் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றங்களால் தீர்ப்புகள் வழங்கி சிறையில் அடைக்கப்பட்டு சிறைக் கைதி களாக 13 ஆண்டுக ளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இதில் பலர் விடுதலை செய்யப் பட வேண்டும் என்ற கோரிக் கையினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முந்தைய அரசாங்கத்திடம் வைக்கப்படு வந்ததன் விளைவாக பலர் விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர்.
விடுதலையாகாமல் சிறையில் உள்ள மற்றவர்களை யும் விடுவிக்க வேண்டி, அப் போதைய முதல்வர் கலைஞரி டம் தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கோரிக்கை வைக்கப் பட்டு, அதன்மேல் நடவடிக்கை தொடரப்பட்ட போது சிலரின் தவறான தகவல்களால் அந்த நடவடிக்கையில் முடக்கம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது வருத்தமளிக்கின்ற செயலாயி னும், இதனை விரிவுபடுத்திப் பேசும் தருணம் இது அல்ல என்பதனை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.
இதில் மிகவும் வேதனைக் குரிய விஷயம், கோவை சிறையில் வாடும் அபுதாஹிர் என்ற இளைஞன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசியர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மிக வேதனைப் பட்டு வருவதாகவும், தனக்கு சிகிச்சை அளிக்க தகுந்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நபர் தொடர்பான விபரங்களை அறிய தலைவர் விரும்பினார். அப்பொழுது 17 வயது நிரம்பிய இளைஞராக சிறைக்குச் சென்ற இவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் என்பதை அறிந்து, இவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை வைத்து (மூன்று முறை) மூன்று மாதங் கள் பரோலில் வெளியில் வந்து அந்த இளைஞர் சிகிச்சை பெற, தான் சொந்த பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் நானும் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று தொடர்ந்து மூன்று மாதங்கள் சிகிச்சை பெறுவதற்கு பரோலில் வருவ தற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தேன்.
அதன்பேரில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டாலும் இரண்டு சிறுநீர கங்களும் பாதிக்கப்பட்டு தற் போது இரு கண்களும் பாதிக் கப்பட்டு பார்வையும் இழந்த நிலையில் உள்ளார். இவர் மேலும் தொடர் சிகிச்சை பெறுவதற்காக பரோலில் விடுதலை செய்ய வேண்டு மென்று தற்போதைய அரசிடம் வைத்து வரும் கோரிக்கை யினை ஏற்கின்ற மனநிலையில் அரசு இல்லை. எனவே, தமிழக அரசிற்கு இக்கூட்டத்தின் வாயிலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வேண்டு கோள் விடுக்கின்றேன்.
நோயாளியாக அவதிப்படும் அபுதாஹிர் என்ற இளைஞன் சிகிச்சை பெறுவதற்கு பரோலில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுக ளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூகத்தைச் சார்ந்த சிறைவாசிகளையும் அவர்களது நன்னடைத்தையைக் கணக் கில் கொண்டும் அவர் மீது கருணை அடிப்படையில் தமிழக அரசால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை இந்த கூட்டத் தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழக அரசுக்கு தெரிவிப்பது, கோவை சிறையில் இருந்த பலரை பிற ஊர்களில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டதன் விளைவாக அவர்களது குடும்பத்தார் பிரிவுத்துயர் மட்டுமல்லாமல் அவர்களை எளிதில் காணவும் இயலாமல் பெருந்துயரத்திற்கு ளாகி வருகின்றனர். இந் நிலை சிறைத் துறை அதிகாரிகளால் ஏற்படுவதாக உள்ளது. எனவே, இந்த இன்னல்களையும், இடையூறு களையும் முற்றிலும் விலக்கி திரும்பவும் அவர்களை கோவை சிறைக்கே மாற்றப்பட வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர், பிற அதிகாரிகளையும் சென்னைக்கு சென்றதும் சந் திக்க உள்ளேன் என்ற செய்தியை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்வதோடு, இன்று சமுதாய நிலையில் இடஒதுக்கீடு சம்பந் தப்பட்ட விபரங்களை பாராளு மன்ற உறுப்பினராக இருக் கக்கூடிய காரணத்தினால் நாடாளுமன்றத்தில் அங்கு என்ன பேச வேண்டுமோ அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
ஒருமுறை பாராளுமன்றத் தில் சிவசேனாவைச் சேர்ந்த சந்திரகாந்த் ஜேரே, உலமாக்க ளுக்கு எதிராகவும், உண்மைக்கு புறம்பான கருத் துக்களை எடுத்துரைத்தார். அதனை எதிர்ப்பதற்கு பாராளு மன்றத்தில் இருந்த முஸ்லிம் எம்.பி.க்கள் முன்வரவில்லை. எதிர்த்து சபாநாயகரிடம் அவர் சொல்வது அனைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களை எடுத்து பேசி வருகிறார். எனவே அவர் பேசுவதை அனுமதிக்க கூடாது என்று வாதிட்டேன்.
இது சம்பந்தப்பட்ட செய்தி தகவல்கள் வெளிவந்துள்ளது . அதேபோன்று பாபரிமஸ்ஜித் இடிப்பு முஸ்லிம்கள் அனைவ ருக்கும் வேதனை தரக்கூடிய விஷயம்தான்.
டிசம்பர் 6-ம் தினத்தை முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்க தினமாக அனுசரித்து வருகி றோம். பெரும் பான்மை சமுதா யத் தினர் பாபரி மஸ்ஜித் இடித்ததை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால், அவர்களை எதிர்க்கின்ற தோரணையிலும், அவர்களது மனம் புண்படுகின்ற வகை யிலும் போராட்டம், ஆர்ப் பாட்டம் என்ற பெயரில் சில அமைப்புகள் நடந்து கொள்வது வேதனை தருவதாக அமைகி றது.
இந்த நாட்டில் இருக்கக் கூடிய சிறுபான்மையினரும், பெரும்பான்மை சமூகத்தினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல்பாடு களை ஏற்றுக் கொள்கின்றனர். அதுமட்டுமல் லாமல் முஸ்லிம் லீகை சேர்ந்தவர் கள் அரசு அதிகாரிகளையோ அல்லது காவல் துறை அதிகாரி களையோ சந்திக்க சென்றால் அவர்களுக்குரிய மரியாதை யும், கண்ணியமும் வழங்கப்படு கிறது.
இன்று சமுதாய உணர்வு மிக்க நிலையில் சமூக சேவை ஆற்ற வேண்டும் என்ற எண் ணத்தில் பல இளைஞர்கள் சில இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல் படுகின்றனர். அதுமட்டு மின்றி இதன் மூலம் போராட்டங்க ளும், ஆர்ப்பாட்டங்களும் பல நடத் தப்பட்டு வருகின்றனர். இவற் றால் சமூகத்திற்கு எவ்வித பயனுமில்லை என்பதை உணர்ந்த வர்களாக பலர் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மகத்துவத்தை அறிந்து நம்மோடு இணைந்து வருகின் றனர்.
இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார்.
பி. முஹம்மது பஷீர்
கூட்டத்தில் முன்னதாக உரையாற்றிய கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பி. முஹம் மது பஷீர் குறிப்பிட்டதா வது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்று பேரியக்கமாகும். இது சமுதாய நலனை கருத்தில் கொண்டு எத்தனையோ நல்ல பல காரியங்கள் செய்து வருகின் றோம். சமீபத்தில் சில அமைப்புகள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றுகோரி பொது கூட்டம் நடத்தினார்கள்.
ஆனால், சிறைவாசிகளை விடுதலைசெய்ய தொடர்ந்து போராடி வருவது மட்டுமன்றி, அவர்களது குடும்பங்களுக்கு தொழில்ரீதியாக வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நல்ல அடிப்படையில் உதவி செய்து வரும் ஒரே இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட் டும்தான். எங்களுக்கு இதெல் லாம் விளம்பர செய்து அரசியல் நடத்த வேண்டும் என்ற அவசி யம் இல்லை ஆனால், சமுதாய உணர்வுடன் இதன் தொடர்பாக அரசாங்கத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வரு வது மட்டுமல்லாமல் சொந்த பொறுப்பேற்று சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டு மென்று பகிரங்கமாக சொன்ன ஒரே தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தான். இந்த துணிச்சலும், ஆற்றலும் எவருக்கு உண்டு என்று வினா எழுப்பினார்.
எல்.எம். அப்துல் ஜலீல் ஹாஜியார்
கோவை எல்.எம். அப்துல் ஜலீல் ஹாஜியார் பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் உரிமை களை உருவாக்கப்பட்ட இயக் கம் இதற்கு பின் தோன்றிய பல இயக்கங்கள் பல தோன்றியது. பரபரப்பாகவும் இருந்தது. ஆனால் அதன் பின்னாளில் காணாமல் போய் விட்டது. எந்த நிலையிலும் எவருக்கும் அஞ்சா மல் எல்லா காரியங்களிலும் துணிச்சலுடன் நின்று மற்ற பல எதிர்பார்ப்புகளை தாண்டி வரலாற்று சாதனைகளை படைத்து வரும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று மட்டும் தான். இது இறைவனின் திருப்பொருத்தத் தைப் பெற்ற இயக்கம் வரலாற் றுச் சரித்திரம். ஆகவேதான் இந்த இயக்கம் தாய்ச்சபை என்று அழைக்கப்படு கிறது. தாய்ச்சபையை எவர் ஒருவர் விரோதமாக நடந்து கொள் கிறாரோ அது தாய்க்கு விரோதமாக நடப்பதற்கு சமம் என்று பேசினார்.
- செய்தி கோவை ரஃபீக்
|
- ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக நுட்பம், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. (Wednesday, May 30, 2012)
- இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்புக்குழு கூட்டம்எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், எம்.கே. முஹம்மது யூனூஸ், டி.கே. ஷாநவாஸ் பங்கேற்பு (Wednesday, May 30, 2012)
- சிறைமாற்றம் செய்யப்பட்ட கைதிகளை மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களின் நன்னடத்தை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் சிறைத்துறை உயர் அதிகாரியிடம் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி வேண்டுகோள் (Wednesday, May 30, 2012)
- காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் ரூ.70லட்சம் பணிகள் முடங்கி கிடப்பதை கண்டித்து இ.யூ. முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், காயல் மகபூப் பங்கேற்பு (Tuesday, May 29, 2012)
- சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட மத்திய அரசு உத்தரவு செல்லாது என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு மதசார்பற்ற சக்திகள் இணைந்து சட்டப் பாதுகாப்பு பெற்றுத்தர முஸ்லிம்கள் கோரிக்கை (Tuesday, May 29, 2012)
- இந்திய யூனியன் முஸ்லிம் லீகால்தான் கேரளாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு பெற முடிந்தது கோவை இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., பேச்சு (Saturday, May 26, 2012)
- இடஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்நீலகிரி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி, மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் (Saturday, May 26, 2012)
- பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் கோவையில் நடைபெற்ற இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் (Saturday, May 26, 2012)
- காயல்பட்டினத்தில் தியாகி பி.எச்.எம். அப்துல் காதிர் மன்ஸில் என்ற பெயரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொந்த அலுவலகம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திறந்து வைத்தார் (Friday, May 25, 2012)
- விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை (Wednesday, May 23, 2012)
- செங்கோட்டை அரசு பேருந்து பணிமனை முன்பு கேரள முன்னாள் கல்வி அமைச்சர் ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.க்கு வரவேற்பு (Tuesday, May 22, 2012)
- சிறுபான்மையினர்நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்திற்கு கடந்த அரசு வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும் புளியங்குடி முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் (Monday, May 21, 2012)
- சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., காணத் தவறாதீர்! (Friday, May 18, 2012)
- சமத்துவம்’’- அங்கும் இங்கும் (Friday, May 18, 2012)
- கோவில்களில் நீதி போதனை ; 6ம் வகுப்பிலேயே சாதிச்சான்றிதழ் வரவேற்புக்குரியவை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்தப்படாதது வருத்தத்திற்குரியது அ.இ.அ.தி.மு.க ஓராண்டு ஆட்சி பற்றி தலைவர் பேராசிரியர் கருத்து (Thursday, May 17, 2012)
- குவைத் காயிதேமில்லத் பேரவை சார்பில் இம் மாத இறுதியில் மாநாடு - கருத்தரங்கம் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய - தமிழக நிர்வாகிகளை அழைக்க முடிவு (Wednesday, May 16, 2012)
- உடன்குடியில் பிரைமரி அமைப்பதற்கான ஜமாஅத் கூட்ட ஆலோசனை இந்திய முஸ்லிம்களை அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கும் தகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மட்டுமே உண்டு மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் பேச்சு (Tuesday, May 15, 2012)
- விமான கட்டண சலுகை தொடர்ந்து நீடிக்க வேண்டும் ஹஜ் பயணத்திற்கு அரசு வழங்குவதை `மானியம்’ என்று சொல்வது அறியாமைபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி (Tuesday, May 15, 2012)
- நாகை வடக்கு மாவட்டத்தில் பிற இயக்கங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. முன்னிலையில் கோலாகல விழா (Monday, May 14, 2012)
- புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியில்லை ஆம்பூரில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் பேட்டி (Monday, May 14, 2012)
- காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக முதல் பாராளுமன்றத்தில் இருந்து முஸ்லிம் லீக்தான் அங்கம் வகிக்கிறது பாராளுமன்ற 60-வது ஆண்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது பெருமிதம் (Monday, May 14, 2012)
- இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வலியுறுத்தியும் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரியும் மே 19-ல் கோவை மாநகரில் இ.யூ. முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. உரையாற்றுகின்றனர் (Sunday, May 13, 2012)
- இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வலியுறுத்தி மே 20-ல் புளியங்குடியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உரையாற்றுகின்றனர் (Sunday, May 13, 2012)
- காயிதெ மில்லத் பிறந்த ஜூன் 5-ல் மாவட்டம் முழுவதும் கல்வி விழிப்புணர்வு தினம்; முஸ்லிம் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் (Wednesday, May 09, 2012)
- ஹஜ் மானியம் 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை (Wednesday, May 09, 2012)
- பிற்பட்டோருக்கான சலுகைகளை அனுபவிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழிகாட்டுகிறது சாதிவாரி கணக்கெடுப்பில் சமுதாயத்தை யாரும் குழப்ப முயற்சிக்க வேண்டாம் கடையநல்லூர் பொதுக்கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு (Tuesday, May 08, 2012)
- தலைவர் பேராசிரியரின் பேட்டியில் ``இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை’’ (Monday, May 07, 2012)
- நெல்லை மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தலைவர் பேராசிரியருக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு எம்.எஸ். துராப்சா தலைமையில் ரயில் நிலையத்தில் வரவேற்றனர் (Monday, May 07, 2012)
- மே 26, 27 சனி, ஞாயிறு தேதிகளில் தென்காசி வி.டி.எஸ்.ஆர். நகரில் மாபெரும் தப்லீக் இஜ்திமா பந்தல் அமைக்கும் பணியை தலைவர் பேராசிரியர் நேரில் பார்வையிட்டார் (Monday, May 07, 2012)
- முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தித்தர வலியுறுத்தி கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாபெரும் பொதுக்கூட்டம் தலைவர் பேராசிரியர், மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் (Saturday, May 05, 2012)
- இ.யூ. முஸ்லிம் லீக் பெயர் - கொடியை இனி யாரும் முறைகேடாக பயன்படுத்த முடியாது - மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வேண்டுகேள் (Wednesday, May 02, 2012)
- சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் திருப்பூரில் மே தின கொடியேற்று விழா (Wednesday, May 02, 2012)
- காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகமான பி.எச்.எம். அப்துல் காதிர் மன்ஸில் திறப்பு விழா: (Wednesday, May 02, 2012)
|
Our News papers
இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Click Here to read E- Paper |
|
|
|
|
|
|
|